துற்குண மாயைபோய்த் தொலைந்தது ஞானம் தோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான் சிற்குண வரைமிசை உதயஞ்செய் ததுமா சித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த நற்குணச் சன்மார்க்க சங்கத்தார் எல்லாம் நண்ணினர் தோத்திரம் பண்ணிநிற் கின்றார் எற்குண வளித்தஎன் அருட்பெருஞ் சோதி என்னம்மை யேபள்ளி எழுந்தருள் வாயே