Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4886
துற்குண மாயைபோய்த் தொலைந்தது ஞானம் 

தோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான் 
சிற்குண வரைமிசை உதயஞ்செய் ததுமா 

சித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த 
நற்குணச் சன்மார்க்க சங்கத்தார் எல்லாம் 

நண்ணினர் தோத்திரம் பண்ணிநிற் கின்றார் 
எற்குண வளித்தஎன் அருட்பெருஞ் சோதி 

என்னம்மை யேபள்ளி எழுந்தருள் வாயே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.