தூக்கங் கெடுத்தான் சுகங்கொடுத்தான் என்னுளத்தே ஏக்கந் தவிர்த்தான் இருள்அறுத்தான் - ஆக்கமிகத் தந்தான் எனைஈன்ற தந்தையே என்றழைக்க வந்தான்என் அப்பன் மகிழ்ந்து