Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3020
தெருளமுதத் தனியோகர் சிந்தையிலும் ஞானச்

செல்வர்அறி விடத்தும்நடஞ் செய்யும்நட ராஜன்
அருளமுதம் அளிப்பன்என்றே அன்றுமணம் புணர்ந்தான்

அளித்தறியான் அணுத்துணையும் அனுபவித்தும் அறியேன்
மருளுடையான் அல்லன்ஒரு வஞ்சகனும் அல்லன்

மனம்இரக்கம் மிகஉடையான் வல்வினையேன் அளவில்
இருளுடையார் போலிருக்கும் இயல்பென்னை அவன்றன்

இயல்பறிந்தும் விடுவேனோ இனித்தான்என் தோழீ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.