Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :606
தெருளுடையார் நின்அன்பர் எல்லாம் நின்றான்
சிந்தையில்வைத் தானந்தம் தேக்கு கின்றார்
மருளுடையேன் நான்ஒருவன் பாவி வஞ்ச
மனத்தாலே இளைத்திளைத்து மயங்கு கின்றேன்
இருளுடையேன் ஏர்பூட்டும் பகடு போல்இங்
கில்உழப்பில் உழைக்கின்றேன் எல்லாம் வல்ல
அருளுடையாய் ஆளுடையாய் உடையாய் வீணில்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.