Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4132
தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம் 

திருஅமுதோர் திருக்கரத்தே திகழ்வள்ளத் தெடுத்தே 
ஒற்றியிற்போய்ப் பசித்தனையோ என்றெனையங் கெழுப்பி 

உவந்துகொடுத் தருளியஎன் உயிர்க்கினிதாந் தாயே 
பற்றியஎன் பற்றனைத்தும் தன்அடிப்பற் றாகப் 

பரிந்தருளி எனைஈன்ற பண்புடைஎந் தாயே 
பெற்றியுளார் சுற்றிநின்று போற்றமணிப் பொதுவில் 

பெருநடஞ்செய் அரசேஎன் பிதற்றும்உவந் தருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.