Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3167
தெள்ளமுதம் அனையஒரு திருஉருவந் தாங்கிச்

சிறியேன்முன் எழுந்தருளிச் செழுமணப்பூ அளித்தாய்
உள்ளமுதம் ஆகியநின் திருக்குறிப்பே துணரேன்

உடையவளை உடையவனே உலகுணரா ஒளியே
கள்ளமிலா அறிவாகி அவ்வறிவுக் கறிவாய்க்

கலந்துநின்ற பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே
கொள்ளுதொறும் கரணமெலாங் கரைந்துகனிந் தினிக்கும்

கொழுங்கனியே கோற்றேனே பொதுவிளங்குங் குருவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.