தேகம்எப் போதும் சிதையாத வண்ணம் செய்வித் தெலாம்வல்ல சித்தியும் தந்தே போகம்எல் லாம்என்றன் போகம தாக்கிப் போதாந்த நாட்டைப் புரக்கமேல் ஏற்றி ஏகசி வானந்த வாழ்க்கையில் என்றும் இன்புற்று வாழும் இயல்பளித் தென்னை ஆகம வீதியில் ஆடச்செய் தீரே அருட்பெருஞ் ஸோதிஎன் ஆண்டவர் நீரே