தேவர்க் கரிய வானந்தத் திருத்தாண் டவஞ்செய் பெருமானீர் மேவக் குகுகு குகுகுவணி வேணி யுடையீ ராமென்றேன் தாவக் குகுகு குகுகுகுகுத் தாமே யைந்து விளங்கவணி யேவற் குணத்தா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ