பாடல் எண் :1379
தேவேநின் அடிநினையா வஞ்ச நெஞ்சைத்
தீமூட்டிச் சிதைக்கறியேன் செதுக்கு கில்லேன்
கோவேநின் அடியர்தமைக் கூடாப் பொய்மைக்
குடிகொண்டேன் புலைகொண்ட கொடியேன் அந்தோ
நாவேற நினைத்துதியேன் நலமொன் றில்லேன்
நாய்க்கடைக்கும் கடைப்பட்டேன் நண்ணு கின்றோர்க்
கீவேதும் அறியேன்இங் கென்னை யந்தோ
என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்
டீயஉம
--------------------------------------------------------------------------------
உள்ளப் பஞ்சகம்
பொது
கட்டளைக் கலித்துறை
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.