தொடுக்கின்றேன் மாலைஇது மணிமன்றில் நடிக்கும் துரைஅவர்க்கே அவருடைய தூக்கியகால் மலர்க்கே அடுக்கின்றோர்க் கருள்அளிக்கும் ஊன்றியசே வடிக்கே அவ்வடிகள் அணிந்ததிரு அலங்காரக் கழற்கே கொடுக்கின்றேன் மற்றவர்க்குக் கொடுப்பேனோ அவர்தாம் குறித்திதனை வாங்குவரோ அணிதரம்தாம் உளரோ எடுக்கின்றேன் கையில்மழுச் சிற்சபைபொற் சபைவாழ் இறைவர்அலால் என்மாலைக் கிறைவர்இலை எனவே