தோடார் குழையார் ஒற்றியினார் தூயர்க் கலது சுகம்அருள நாடார் அவர்க்கு மாலையிட்ட நாளே முதல்இந் நாள்அளவும் சூடா மலர்போல் இருந்ததல்லால் சுகமோர் அணுவுந் துய்த்தறியேன் கோடா ஒல்குங் கொடியேஎன் குறையை எவர்க்குக் கூறுவனே