தோன்றுதுவி தாத்துவித மாய்வி சிட்டாத் துவிதமாய்க் கேவலாத் துவித மாகிச் சான்றசுத்தாத் துவிதமாய்ச் சுத்தந் தோய்ந்த சமரசாத் துவிதமுமாய்த் தன்னை யன்றி ஊன்றுநிலை வேறொன்று மிலதாய் என்றும் உள்ளதாய் நிரதிசய உணர்வாய் எல்லாம் ஈன்றருளுந் தாயாகித் தந்தை யாகி எழிற்குருவாய்த் தெய்வதமாய் இலங்குத் தேவே