தோளா மணிநேர் வடிவழகர் சோலை சூழ்ந்த ஒற்றியினார் மாளா நிலையர் என்றனக்கு மாலை இட்டார் மருவிலர்காண் கேளாய் மாதே என்னிடையே கெடுதி இருந்த தெனினும்அதைக் கோளார் உரைப்பார் என்னடிஎன் குறையை எவர்க்குக் கூறுவனே