நசைத்தமேல் நிலைஈ தெனஉணர்ந் தாங்கே நண்ணியும் கண்ணுறா தந்தோ திசைத்தமா மறைகள் உயங்கின மயங்கித் திரும்பின எனில்அதன் இயலை இசைத்தல்எங் ஙனமோ ஐயகோ சிறிதும் இசைத்திடு வேம்என நாவை அசைத்திடற் கரிதென் றுணர்ந்துளோர் வழுத்தும் அருட்பெருஞ் சோதிஎன் அரசே