நஞ்சுண் டுயிர்களைக் காத்தவ னேநட நாயகனே பஞ்சுண்ட சிற்றடிப் பாவைபங் காநம் பராபரனே மஞ்சுண்ட செஞ்சடை மன்னாபொன் அம்பல வாவலவா பிஞ்சுண்ட வாய்க்குப் பழம்அளித் தாண்ட பெரியவனே