Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5768
நடம்புரிவார் திருமேனி வண்ணம்அதை நான்போய் 

நன்கறிந்து வந்துனக்கு நவில்வேன்என் கின்றாய் 
இடம்வலம்இங் கறியாயே நீயோஎன் கணவர் 

எழில்வண்ணம் தெரிந்துரைப்பாய் இசைமறையா கமங்கள் 
திடம்படநாம் தெரிதும்எனச் சென்றுதனித் தனியே 

திருவண்ணம் கண்டளவே சிவசிவஎன் றாங்கே 
கடம்பெறுகள் உண்டவென மயங்குகின்ற வாறு 

கண்டிலைநீ ஆனாலும் கேட்டிலையோ தோழீ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.