Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3715
நதிகலந்த சடைஅசையத் திருமேனி விளங்க 

நல்லதிருக் கூத்தாட வல்லதிரு அடிகள் 
கதிகலந்து கொளச்சிறியேன் கருத்திடையே கலந்து 

கள்ளம்அற உள்ளபடி காட்டிடக்கண் டின்னும் 
பதிகலந்து கொளும்மட்டும் பிறர்அறியா திருக்கப் 

பரிந்துள்ளே இருந்தஎன்னை வெளியில் இழுத் திட்டு 
மதிகலந்து கலங்கவைத்த விதியைநினைந் தையோ 

மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.