Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5705
நன்பாட்டு மறைகளுக்கும் மால்அயர்க்கும் கிடையார் 

நம்அளவில் கிடைப்பாரோ என்றுநினைத் தேங்கி 
என்பாட்டுக் கிருந்தேனை வலிந்துகலந் தணைந்தே 

இன்பமுறத் தனிமாலை இட்டநடத் திறைவர் 
முன்பாட்டுக் காலையிலே வருகுவர்மா ளிகையை 

முழுதும்அலங் கரித்திடுக ஐயுறவோ டொருநீ 
தன்பாட்டுக் கிருந்துளறேல் ஐயர்திரு வார்த்தை 

சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.