Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4151
நன்மைஎலாம் தீமைஎனக் குரைத்தோடித் திரியும் 

நாய்க்குலத்தில் கடையான நாயடியேன் இயற்றும் 
புன்மைஎலாம் பெருமைஎனப் பொறுத்தருளிப் புலையேன் 

பொய்உரைமெய் உரையாகப் புரிந்துமகிழ்ந் தருளித் 
தன்மைஎலாம் உடையபெருந் தவிசேற்றி முடியும் 

தரித்தருளி ஐந்தொழில்செய் சதுர்அளித்த பதியே 
இன்மைஎலாம் தவிர்ந்தடியார் இன்பமுறப் பொதுவில் 

இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.