Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3943
நன்றானை மன்றகத்தே நடிக்கின் றானை 

நாடாமை நாடலிவை நடுவே ஓங்கி 
நின்றானைப் பொன்றாத நிலையி னானை 

நிலைஅறிந்து நில்லாதார் நெஞ்சி லேசம் 
ஒன்றானை எவ்வுயிர்க்கும் ஒன்றா னானை 

ஒருசிறியேன் தனைநோக்கி உளம்நீ அஞ்சேல் 
என்றானை என்றும்உள இயற்கை யானை 

எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே    

--------------------------------------------------------------------------------

 கண்கொளாக் காட்சி 
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.