Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3601
நயந்த கருணை நடத்தரசே 

ஞான அமுதே நல்லோர்கள் 
வியந்த மணியே மெய்யறிவாம் 

விளக்கே என்னை விதித்தோனே 
கயந்த மனத்தேன் எனினும்மிகக் 

கலங்கி நரகக் கடுங்கடையில் 
பயந்த பொழுதும் தாழ்த்திருத்தல் 

அழகோ கடைக்கண் பார்த்தருளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.