Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5690
நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும் 

நாடியமந் திரங்கள்சில கூடிஉரை யிடவே 
வியந்துமற்றைத் தேவர்எலாம் வரவும்அவர் நேயம் 

விரும்பாதே இருப்பதென்நீ என்கின்றாய் தோழி 
வயந்தரும்இந் திரர்பிரமர் நாரணர்கா ரணர்கள் 

மற்றையர்கள் மற்றையர்கள் மற்றையர்கள் எவர்க்கும் 
பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே 

பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே
பாடல் எண் :5691
நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும் 

நங்கைநினைக் கண்டிடவே நாடிமற்றைத் தலைவர் 
வியந்துவரு கின்றதுகண் டுபசரியா திங்கே 

மேல்நோக்கி இருப்பதென்நீ என்கின்றாய் தோழி 
வயந்தருபார் முதல்நாத வரையுளநாட் டவர்க்கும் 

மற்றவரை நடத்துகின்ற மாநாட்டார் தமக்கும் 
பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே 

பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே
பாடல் எண் :5692
நயந்தநட நாயகர்உன் நாயகரே எனினும் 

நாடும்மற்றைத் தலைவர்தமைக் கண்டபொழு தெனினும் 
வியந்தவர்க்கோர் நல்லுரையும் சொல்லாதே தருக்கி 

வீதியிலே நடப்பதென்நீ என்கின்றாய் தோழி 
வயந்தரும்இவ் வண்டபகி ரண்டமட்டோ நாத 

வரையோஅப் பாலும்உள மாநாட்டார் தமக்கும் 
பயந்தகுடி அல்லடிநான் திருச்சிற்றம் பலத்தே 

பதிநடஞ்செய் அடிப்பணிக்கே பதித்தகுடி அறியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.