நல்அமு தனையார் நின்திரு வடிக்கே நண்புவைத் துருகுகின் றனரால் புல்அமு தனையேன் என்செய்வான் பிறந்தேன் புண்ணியம் என்பதொன் றறியேன் சொல்அமு தனைய தோகைஓர் பாகம் துன்னிய தோன்றலே கனியாக் கல்அமு தாக்கும் கடன்உனக் கன்றோ கடையனேன் கழறுவ தென்னே