நல்லார் மதிக்கு மொற்றியுளீர் நண்ணு முயிர்க டொறுநின்றீ ரெல்லா மறிவீ ரென்னுடைய விச்சை யறியீர் போலுமென்றேன் வல்லா யறிவின் மட்டொன்று மனமட் டொன்று வாய்மட்டொன் றெல்லா மறிந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ