Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5336
நல்வினை சிறிதும் நயந்திலேன் என்பாள் 

நான்செயத் தக்கதே தென்பாள் 
செல்வினை ஒன்றுந் தெரிந்திலன் ஐயோ 

தெய்வமே தெய்வமே என்பாள் 
வெல்வினை மன்றில் நடம்புரி கின்றார் 

விருப்பிலர் என்மிசை என்பாள் 
வல்வினை உடையேன் என்றுளம் பதைப்பாள் 

வருந்துவாள் நான்பெற்ற மகளே   
 எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.