Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3094
நவநிலைக்கும் அதிகாரம் நடத்துகின்ற அரசாய்

நண்ணியநின் பொன்னடிகள் நடந்துவருந் திடவே
அவநிலைக்குங் கடைப்புலையேன் இருக்கும்இடத் திரவில்

அணைந்தருளிக் கதவுதிறந் தடியேனை அழைத்தே
சிவநிலைக்கும் படிஎனது செங்கையில்ஒன் றளித்துச்

சித்தமகிழ்ந் துறைகஎனத் திருப்பவளந் திறந்தாய்
பவநிலைக்குங் கடைநாயேன் பயின்றதவம் அறியேன்

பரம்பரமா மன்றில்நடம் பயின்றபசு பதியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.