நாடாக் கொடிய மனம்அடக்கி நல்ல மனத்தைக் கனிவித்துப் பாடாப் பிழையைப் பொறுத்தெனக்கும் பதம்ஈந் தாண்ட பதிக்கொடியே தேடாக் கரும சித்திஎலாம் திகழத் தயவால் தெரிவித்த கோடாக் கொடியே சிவதருமக் கொடியே அடியேற் கருளுகவே