Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :790
நாட்டம் உற்றெனை எழுமையும் பிரியா
நல்ல நெஞ்சமே நங்கையர் மயலால்
வாட்டம் உற்றிவண் மயங்கினை ஐயோ
வாழ வேண்டிடில் வருதிஎன் னுடனே
கோட்டம் அற்றிரு மலர்க்கரம் கூப்பிக்
கும்பி டும்பெரும் குணத்தவர் தமக்குத்
தாள்த லந்தரும் ஒற்றியூர்ச் செல்வத்
தந்தை யார்அடிச் சரண்புக லாமே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.