Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3114
நான்தனிக்குந் தரணத்தே தோன்றுகின்ற துணையாய்

நான்தனியா இடத்தெனக்குத் தோன்றாத துணையாய்
ஏன்றருளுந் திருவடிகள் வருந்தநடந் தருளி

யானுறையும் இடத்தடைந்து கதவுதிறப் பித்து
ஆன்றஎனை அழைத்தெனது கையில்ஒன்று கொடுத்தாய்க்

கறிவிலியேன் செய்யும்வகை அறியேன்நின் கருணை
ஈன்றவட்கும் இல்லைஎன நன்கறிந்தேன் பொதுவில்

இன்பநடம் புரிகின்ற என்னுயிர்நா யகனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.