Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5788
நான்புகலும் மொழிஇதுகேள் என்னுடைய தோழி 

நாயகனார் தனிஉருவம் நான்தழுவும் தருணம் 
வான்புகழும் சுத்தசிவ சாக்கிரம்என் றுணர்ந்தோர் 

வழுத்துநிலை ஆகும்உருச் சுவைகலந்தே அதுவாய்த் 
தேன்கலந்த சுவையொடுநன் மணிகலந்த ஒளியாய்த் 

திரிபின்றி இயற்கைஇன்பச் சிவங்கலந்த நிலையே 
தான்புகல்மற் றையமூன்றும் கடந்தப்பால் இருந்த 

சாக்கிரா தீதம்எனத் தனித்துணர்ந்து கொள்ளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.