நாயெனவே திரிந்தேனை வலிந்தழைத்து நான்முகன்மால் தூயபெருந் தேவர்செயும் தொழில்புரியென் றமுதளித்தாய் நாயகநின் னடியர்சபை நடுவிருக்க வைத்தருளிச் சேயெனவே வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்