Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5591
நிந்தையிலார் நெஞ்சகத்தே நிறைந்தபெருந் தகையை 

நிலையனைத்தும் காட்டியருள் நிலைஅளித்த குருவை 
எந்தையைஎன் தனித்தாயை என்னிருகண் மணியை 

என்உயிரை என்உணர்வை என்அறிவுள் அறிவை 
சிந்தையிலே தனித்தினிக்கும் தெள்ளமுதை அனைத்தும் 

செய்யவல்ல தனித்தலைமைச் சிவபதியை உலகீர் 
முந்தைமல இருட்டொழிய முன்னுமினோ கரண 

முடுக்கொழித்துக் கடைமரண நடுக்கொழித்து முயன்றே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.