Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3030
நிறைஅணிந்த சிவகாமி நேயநிறை ஒளியே

நித்தபரி பூரணமாம் சுத்தசிவ வெளியே
கறைஅணிந்த களத்தரசே கண்ணுடைய கரும்பே

கற்கண்டே கனியேஎன் கண்ணேகண் மணியே
பிறைஅணிந்த முடிமலையே பெருங்கருணைக் கடலே

பெரியவரெல் லாம்வணங்கும் பெரியபரம் பொருளே
குறைஅணிந்து திரிகின்றேன் குறைகளெலாந் தவிர்த்தே

குற்றமெலாங் குணமாகக் கொள்வதுநின் குணமே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.