நிலவார் சடையார் திருஒற்றி நிருத்தர் பவனி தனைக்காண நலவா தரவின் வந்துநின்றால் நங்காய் எனது நாண்கவர்ந்து பலவா தரவால் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம் உலவா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே