Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3217
நிலைநாடி அறியாதே நின்னருளோ டூடி

நீர்மையல புகன்றேன்நன் னெறிஒழுகாக் கடையேன்
புலைநாயேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்

பூதகணஞ் சூழநடம் புரிகின்ற புனிதா
கலைநாடு மதியணிந்த கனபவளச் சடையாய்

கருத்தறியாக் காலையிலே கருணைஅளித் தவனே
தலைஞான முனிவர்கள்தந் தலைமீது விளங்கும்

தாளுடையாய் ஆளுடைய சற்குருஎன் அரசே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.