நீட்டாய சித்தாந்த நிலையினிடத் தமர்ந்தும் நிகழ்கின்ற வேதாந்த நெறியினிடத் திருந்தும் ஆட்டாய போதாந்தம் அலைவறுநா தாந்தம் ஆதிமற்றை அந்தங்கள் அனைத்தினும்உற் றறிந்தும் வேட்டாசைப் பற்றனைத்தும் விட்டுலகம் போற்ற வித்தகராய் விளங்குகின்ற முத்தர்கட்கும் தன்னைக் காட்டாமல் ஒளித்திருக்குங் கள்வனைஎன் கண்ணால் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே