பசிஎனும்ஓர் பெரும்பாவிப் பயலேதுன் பெனும்ஓர் படுபாவிப் பயலேஆ பத்தெனும்பொய்ப் பயலே வசியவத்தைக் கடைப்பயலே தடைப்பயலே இடராம் வன்பயலே நீவீர்எலாம் என்புடைநில் லாதீர் நசியஉமக் குளம்உளதோ இக்கணத்தே நீவீர் நடந்துவிரைந் தோடுமினோ நாடறியா வனத்தே கசியுமனத் தெனைஅறியீர் சிற்சபையில் விளங்கும் கடவுள்மகிழ்ந் தளித்ததனிக் கதிர்ப்பிள்ளை நானே