படித்தனன் உலகப் படிப்பெலாம் மெய்ந்நூல்
படித்தவர் தங்களைப் பார்த்து
நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம
நோக்கினேன் பொய்யர்தம் உறவு
பிடித்தனன் உலகில் பேதையர் மயங்கப்
பெரியரில் பெரியர்போல் பேசி
நடித்தனன் எனினும் நின்னடித் துணையே
நம்பினேன் கைவிடேல் எனையே
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.