பட்டி மாடெனத் திரிதரும் மடவார் பாழ்ங்கு ழிக்குள்வீழ்ந் தாழ்ந்திளைக் கின்றேன் தட்டி லார்புகழ் தணிகையை அடையேன் சம்பு என்னும்ஓர் தருஒளிர் கனியே ஒட்டி லேன்நினை உளத்திடை நினையேன் உதவு றாதுநச் சுறுமரம் ஆனேன் எட்டி என்முனம் இனிப்புறும் அந்தோ என்செய் வான்பிறந் தேன்எளி யேனே