பட்டிப் பகட்டின் ஊர்திரிந்து பணமே நிலமே பாவையரே தெட்டிற் கடுத்த பொய்ஒழுக்கச் செயலே என்று திரிந்துலகில் ஒட்டிக் குதித்துச் சிறுவிளையாட் டுஞற்றி யோடும் மனக்குரங்கைக் கட்டிக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே