Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4765
பணிந்தறியேன் அன்புடனே பாடுதலும் அறியேன் 

படித்தறியேன் கேட்டறியேன் பத்தியில்பூ மாலை 
அணிந்தறியேன் மனம்உருகக் கண்களின்நீர் பெருக 

அழுதறியேன் தொழுதறியேன் அகங்காரம் சிறிதும் 
தணிந்தறியேன் தயவறியேன் சத்தியவா சகமும் 

தான்அறியேன் உழுந்தடித்த தடியதுபோல் இருந்தேன் 
துணிந்தெனக்கும் கருணைசெய்த துரையேஎன் உளத்தே 

சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.