Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5578
பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர் 

பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே 
துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே 

துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த் 
தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க 

சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று 
கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே 

காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் ஆமே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.