பண்ணார் மொழியார் உருக்காட்டும் பணைசூழ் ஒற்றிப் பதியினர்என் கண்ணார் மணிபோன் றென்உயிரில் கலந்து வாழும் கள்வர்அவர் நண்ணார் இன்னும் திருஅனையாய் நான்சென் றிடினும் நலம்அருள எண்ணார் ஆயின் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ