Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :601
பண்ணால்உன் அருட்புகழைப் பாடு கின்றார்
பணிகின்றார் நின்அழகைப் பார்த்துப் பார்த்துக்
கண்ணார உளங்குளிரக் களித்தா னந்தக்
கண்ணீர்கொண் டாடுகின்றார் கருணை வாழ்வை
எண்ணாநின் றுனைஎந்தாய் எந்தாய் எந்தாய்
என்கின்றார் நின்அன்பர் எல்லாம் என்றன்
அண்ணாநான் ஒருபாவி வஞ்ச நெஞ்சத்தால்
அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.