பதியும் அப்பனும் அன்னையும் குருவும்நற் பயன்தரு பொருளாய கதியும் நின்திருக் கழல்அடி அல்லது கண்டிலன் எளியேனே விதியும் மாலும்நின் றேத்திடும் தெய்வமே விண்ணவர் பெருமானே வதியும் சின்மய வடிவமே தணிகைமா மலைஅமர்ந் திடுவாழ்வே