பன்னும்பல் வேறண்டம் எல்லாம்அவ் அண்டப் பரப்பினின்று துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும்உன்னை இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பதென்னே மன்னும் சுகாநந்த வாழ்வே வடிவுடை மாணிக்கமே