பயந்துயர் இடர்உள் மருட்சியா தியஇப் பகைஎலாம் பற்றறத் தவிர்த்தே நயந்தநின் அருளார் அமுதளித் தடியேன் நாடிஈண் டெண்ணிய எல்லாம் வியந்திடத் தருதல் வேண்டும்ஈ தெனது விண்ணப்பம் நின்திரு உளத்தே வயந்தரக் கருதித் தயவுசெய் தருள்க வள்ளலே சிற்சபை வாழ்வே அருளாம் - ச மு க பதிப்பு