பரயோக அனுபவத்தே அகம்புறந்தோன் றாத பரஞ்சோதி யாகும்இணைப் பாதமலர் வருந்த வரயோகர் வியப்பஅடி யேன்இருக்கும் இடத்தே வந்துதெருக் கதவுதனைக் காப்பவிழ்க்கப் புரிந்து திரயோகர்க் கரிதிதனை வாங்குகஎன் றெனது செங்கைதனில் அளித்தாய்நின் திருவருள்என் என்பேன் உரயோகர் உளம்போல விளங்குமணி மன்றில் உயிர்க்கின்பந் தரநடனம் உடையபரம் பொருளே