பரவெளியே நடுவெளியே உபசாந்த வெளியே பாழ்வெளியே முதலாக ஏழ்வெளிக்கப் பாலும் விரவியமா மறைகளெலாம் தனித்தனிசென் றளந்தும் மெய்யளவு காணாதே மெலிந்திளைத்துப் போற்ற உரவில்அவை தேடியஅவ் வெளிகளுக்குள் வெளியாய் ஓங்கியஅவ் வெளிகளைத்தன் னுள்அடக்கும் வெளியாய்க் கரையறநின் றோங்குகின்ற சுத்தசிவ வெளியே கனிந்தநடத் தரசேஎன் கருத்தும்அணிந் தருளே