பாடல் எண் :3542
பரிக்கிலேன் பயமும் இடரும்வெந் துயரும்
பற்றறத் தவிர்த்தருள் இனிநான்
தரிக்கிலேன் சிறிதும் தரிக்கிலேன் உள்ளம்
தரிக்கிலேன் தரிக்கிலேன் அந்தோ
புரிக்கிலே சத்தை அகற்றிஆட் கொள்ளும்
பொற்சபை அண்ணலே கருணை
வரிக்கணேர் மடந்தை பாகனே சிவனே
வள்ளலே சிற்சபை வாழ்வே
வரிக்கணேர் இன்ப வல்லியை மணந்த - முதற்பதிப்பு, பொ சு, சமுக பதிப்பு
திருச்சிற்றம்பலம்
--------------------------------------------------------------------------------
மாயையின் விளக்கம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.